November 26, 2019
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65’ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இலங்கை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது பிறந்த நாள் இன்றாகும்.1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாளை தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இதே போல் கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கோசங்கள் எழுப்பியபடி பிறந்தநாளை கொண்டாடினர்.இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.