• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவுண்ட் டேபிள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம், மரம் நடும்விழா

November 25, 2019 தண்டோரா குழு

கோவை ரவுண்ட் டேபிள் 20 சங்கம் நிழலமயம் தொண்டு நிறுவனம் சார்பில் ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தையொட்டி, சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கல்வி நிறுவனங்களில் 160 மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கத் தலைவர் பட்டாபிராமன்,
வட்டத்தலைவர் ஆலிஸ் வசந்த் சங்கரா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிழல்மயம் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

2ம் நிகழ்ச்சியின்போது வள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக்கலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் பிரமிதா, சௌந்தர்யா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதேபோல அன்னூர் காந்திஜி அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வை ராஜி மற்றும் ஒய் மசூம் குழுவினர் நடத்தினர்.

கோவை ராமகிருஷ்ணா மத்திய பள்ளியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான அமர்வில் போவ் சோவ்ஸ் புட்ஸின் நிர்வாக இயக்குநர்
அஸ்வின் காஷ்யப் நீர் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில் பட்டாபிராமன், ஆலிமேனாள் தலைவி ஆனி வஞ்சிநாத் கலந்து கொண்டனர். வெள்ளலூர் அரசு பள்ளியில் ஓவியபோட்டியையும் கற்பகம் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து ரத்ததானமுகாமையும் நடத்தின. ப்ரூக் பீல்டு வணிக வளாகத்தில் சுஜாதா மூர்த்தி முன்னிலையில் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தெரு நாடகம் நடத்தினர்.

ஒரு வாரம் விழிப்புணர்வுபேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ரூ.1.5 லட்சம் செலவிலான திட்டங்கள் வடக்கு ரவுண்ட் டேபிள் சார்பில் செயல்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க