• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர கோரி 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தர்ணா

November 20, 2019

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர கோரி 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கோவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கோவை மண்டல அனைத்து வங்கி ஓய்வூதியர்கள் இணைந்து நீண்ட கால கோரிக்கையான 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த 30சதவீத குடும்ப ஓய்வூதியத்தை வழங்க கோரியும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரிமியம் குறைக்கவும், வங்கிகளின் ஊழியர்களின் பற்றா குறையை நீக்க வலியுறுத்தியும், வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும் என்றும், 100சதவீத பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நாளை 21 ஆம் தேதி டெல்லியில் மிக பெரிய அளவில் பேரணியை நடத்த போவதாகவும், அதற்கு அரசு செவி சாய்க்கவில்லையென்றால் இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த போவதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க