வங்கி ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர கோரி 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கோவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கோவை மண்டல அனைத்து வங்கி ஓய்வூதியர்கள் இணைந்து நீண்ட கால கோரிக்கையான 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த 30சதவீத குடும்ப ஓய்வூதியத்தை வழங்க கோரியும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரிமியம் குறைக்கவும், வங்கிகளின் ஊழியர்களின் பற்றா குறையை நீக்க வலியுறுத்தியும், வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும் என்றும், 100சதவீத பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நாளை 21 ஆம் தேதி டெல்லியில் மிக பெரிய அளவில் பேரணியை நடத்த போவதாகவும், அதற்கு அரசு செவி சாய்க்கவில்லையென்றால் இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த போவதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி