November 18, 2019
டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிசம்பர் மாதம் 2- ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டிசம்பர் 13- ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், . 9 மாவட்டங்களில் மறுசீரமைப்பு நடத்திய பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.