• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெம் மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

November 14, 2019

கோவை ஜெம் மருத்துவமனையில் சர்க்கரை நோயை வெல்லலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை மருத்துவமனை அரங்கத்தில் நடந்தது.

இதில் மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பிரவீன் ராஜ் பேசுகையில், முதன் முறையாக இயற்கை மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் இணைந்து சர்க்கரை நோயை கையாள உள்ளோம். ஜெம் மருத்துவமனை, அவிநாசி பல்கலைக்கழகம் மற்றும் யங் இந்தியா உடன் இணைந்து உடல் பருமன் குறித்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவையில் உள்ள பள்ளிகளில் நடத்தி வருகிறோம். இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் அதிக உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 சதவீதம் அதிக உடல் எடையுடனும், 12.2 சதவீதம் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்று உடல் பருமனாக உள்ள சிறுவர்கள் நாளை உடல் பருமன் நோயாளிகளாக மாறுவதற்கான அபாயம் உள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களைச் சரிசெய்ய மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் கூடிய முழுமையான அணுகுமுறை உதவுகிறது என்றார்.

மேலும் படிக்க