• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரிய வகையான இராட்சத சிறுநீரக கேன்சர் கட்டியை அகற்றி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை

November 12, 2019 தண்டோரா குழு

அரிய வகையான இராட்சத சிறுநீரக கேன்சர் கட்டியை நவீன முறையில், கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீரம்மாள், வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் இராட்சத கேன்சர் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். 24 சென்டி மீட்டரும், 2 கிலோ எடையும் இருந்த கட்டி, ரத்த குழாய் வரை பரவி இருந்ததால், அதனை ரீனஆஞ்கியோ எம்பாலிஷேஷன் மூலம் அந்த கட்டியின் அளவு மற்றும் எடையை குறைத்து, கட்டி 8 சென்டி மீட்டராக குறைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற அறுவை சிகிச்சைக்காக 2.5 கோடி மதிப்புள்ள நவீன இயந்திரம் சமீபத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். தற்போது வரை கோவை அரசு மருத்துவ மனையில் 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சைகள், கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க