• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞரை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கொங்குநாட்டு பெண்

November 11, 2019

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞரை கோவையை சேர்ந்த பெண் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

கோவை துடியலூர் அருகிலுள்ள பன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம் – கலாவதி ஆகியோரின் மகள் வித்யபிரபா (வயது 28). கோவையில் கணிப்பொறியியல் படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதைப்போல் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷீல்டஸ் என்பவரின் மகன் மைக்கேல் ஷீல்டஸ் (வயது 29). ஜெர்மனி நாட்டில் இருவரும் ஓரே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்குமிடையே அறிமுகமாகி நட்பு மலர்ந்தது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் தங்கள் வீட்டாரிடம் பேசி சம்மதத்தைப் பெற்றனர். மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினர் வரமுடியாததால். வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ் பார்வதி ஆகியோர் மனமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளைச் செய்தனர். பாதபூஜை செய்தல், மலர் வாழ்த்துதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த திருமணத்திற்கு ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டஸ் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களும் திருமண விழாவின் போது தமிழ்க் கலாச்சார உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

மேலும் படிக்க