• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சீக்கியர்கள் ஊர்வலம்

November 11, 2019

குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற ஊர்வலத்தில் சீக்கிய பக்திப் பாடல்கள் பாடிய படி சீக்கியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குரு நானக் தேவ்ஜியின் 550 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை குருநானக் சிங் சங்கத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை பிரிக்பீல்ட்ஸ் எதிரில் உள்ள குருநானக் சங்கத்தின் முன்பாக சீக்கியர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் துவங்கியது. இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்,பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், மற்றும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் பஷீர் அகமது மற்றும் கிறிஸ்தவ போதகர்கள் பிரான்சிஸ் ,பால்ராஜ்,சதயூஸ்,எட்வர்டு உள்ளிட்ட பல்வேறு மத தலைவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில், சீக்கிய பக்திப் பாடல்கள் பாடிய படி சீக்கிய குரு இருப்பதை போல், பட்டு துணியால் போர்த்தப்பட்ட பெட்டிக்கு வெண்சாமரம் வீசப்பட்டது.

அதைத் தொடர்ந்து குரு குருநானக்கின் புகழை, கலைக்குழுவினர் பாடிய படி ஆர்.எஸ்.புரம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.இதில் சீக்கிய மதத்தினருக்கான கொடியை கையில் ஏந்தியபடி கோவை,ஈரோடு,சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதகளை சேர்ந்த ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ஊர்வலமாக சென்றனர். ஆண்கள் கைகளில் நீண்ட பட்டை தீட்டப்பட்ட வாள்களை சுழற்றி பல்வேறு சாகச நிகழ்சிகளை நடத்தினர். ஊர்வலம் முடிந்த பிறகு குருவின் பெயரால் அங்குள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

மேலும் படிக்க