• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டி.ஜி.பி திரிபாதி தலைமையில் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை

November 7, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடுகேரளா எல்லையில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு மற்றும் அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் போலீசார் முன்
ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் அவினாசி சாலையில் காவலர் பயிற்சி பள்ளி மைதனத்தில் உள் அமைந்துள்ள காவலர் விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, சிறப்பு அதிரடி படை எஸ்.பி. மூர்த்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அண்மையில் தமிழக- கேரளா எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட எதிரொலியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கல்லாம் என கருதப்படுகிறது.

மேலும் அயோத்தி தீர்ப்பு வெளியாகும் நிலையில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநாகர காவல் ஆணையர் சுமித்சரண் உட்பட உயர் அதிகாரிகளுடன் டி.ஜி.பி.திரிபாதி ஆலோசனை நடத்த இருக்கின்றார்.

மேலும் படிக்க