• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

November 5, 2019 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய், ‛தலைவி’ என்ற பெயரில் கங்கனாவை கொண்டும், இயக்குனர் பிரியதர்ஷினி, ‛தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனனை கொண்டும் படம் இயக்குகிறார்கள்.

இயக்குனர் கவுதம் மேனன், ‛குயின்’ என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணனை வைத்து வெப் சீரிஸ் இயக்குகிறார்.இதற்கிடையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும்,இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(நவ., 5) நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதராரின் குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நவம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு,வழக்கை 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க