• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை

November 3, 2019

கோவையில் நள்ளிரவில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது

வட கிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்து, கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சுந்தராபுரம், ராமநாதபுரம், வடவள்ளி, உக்கடம், வெள்ளலூர்,கணபதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க