• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை

November 3, 2019

கோவையில் நள்ளிரவில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது

வட கிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்து, கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சுந்தராபுரம், ராமநாதபுரம், வடவள்ளி, உக்கடம், வெள்ளலூர்,கணபதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க