• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று கல்லறை திருநாள் கடைபிடிப்பு

November 2, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இன்று கல்லறை திருநாள் அனைத்து ஆன்மாக்கள் தினமான இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்படுகிறது.

இயேசு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சியளித்து பின் வானுலகை அடைந்தார் அவரை போலவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் உயிர் தருவதாக கருதப்படுகிறது. மண்ணிலிருந்து ஆதாமை படைத்த ஆண்டவர் அவனது விலா எலும்பிலிருந்து ஏவாள் படைத்தார். பின் அவர்களை பார்த்து மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் மீண்டும் மண்ணுக்கே திரும்புவீர்கள் என்று மேலும் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கிறவன் எவனோ என்றென்றும் மரிக்காமல் இருப்பான் என்றார். இதன் அடிப்படையில்தான் கிறிஸ்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நாளில் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர் இதற்கு முன்னதாக நேற்று சகல பரிசுத்தவான்கள் தினம் என்ற பெயரில் துறவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் அருகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறைகளில் தங்கள் இறந்த உறவினர்களுக்கு அவரவர்களுடைய கல்லறைகளில் வர்ணங்கள் பூசி மாலையில் அலங்காரம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி தங்களுடைய பிரார்த்தனையை செய்வார்கள்.

மேலும் படிக்க