• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனீமியா இல்லாத கோவை – ஆலயம் அறக்கட்டளை விழிப்புணர்வு

November 1, 2019 தண்டோரா குழு

கோவை வடவள்ளியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி வளாகத்தில் அனிமீயா என்ற ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர்,

வைட்டமின் பி12, இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகம்.பெண்கள் சத்துள்ள பசலை கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, கம்பு, ராகி, கோதுமை, பேரிச்சம்பழம் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ரத்தசோகை பாதிப்பு இருந்தால் முடி உதிர்தல், நகம் உடைதல் , படபடப்பு, சோர்வு, முகம் வெளிரிய நிலையில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ரத்த சோகை ஏற்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவிகள் தங்களது உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும். ஆலயம் அறக்கட்டளை சார்பில் தன்னார்வலர்கள் உதவியுடன் நகரில் அனைத்து குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் ரத்த சோகை விழிப்புணர்வு நடத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்துவதன் மூலமாக மாணவிகள் நோய் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதிக ரத்தப்போக்கு காரணமாகவும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும். சத்தான உணவுகள் மூலமாகவே பெண்கள் ரத்தசோகை பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழிப்புணர்வு முகாமில் கோவை மாநகராட்சி கமிஷனர் ஷர்வண் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க