• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தலாக் கூறி விவாகரத்து கேட்ட கணவர் மீது வழக்கு பதிவு

October 31, 2019 தண்டோரா குழு

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து 4 மாதங்களிலேயே தலாக் மூலம் விவாகரத்து கேட்ட கணவர் மீது திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை அன்னூர் கே.கே. வீதியை சேர்ந்தவர் முகமது செரீப், இவரது மகன் முகமது அலி (32). மனைவி வாஜியா (24) போத்தனூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் வாஜியா போத்தனூர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் முகமது அலி தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சனை கேட்டு மிரட்டுவதாகவும், முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் வாஜியாவை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து, தலாக் என கூறி விவாகரத்து கேட்டு, வாஜியாவை போத்தனூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து போத்தனூர் போலீஸார் முகமது அலி மற்றும் அவரது உறவினர்களான பானு, ஜக்காரியா, பாஷா, நிஷா, அன்வர், உள்ளிட்ட ஏழு பேர் மீது வரதட்சனை கொடுமை 498(A) மற்றும் இஸ்லாமிய பெண் திருமண பாதுகாப்பு சட்டம் (3r/w4 ) – 2019. பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கானது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க