• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

October 21, 2019

கோவை மாவட்ட விஜய் மாணவரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் இன்று சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி தொகை வழங்கபட்டது.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு சேவை பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை தவிர்த்து விட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி போன்ற சேவைப் பணியை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று கோவை 100 அடி சாலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சைக்கான உதவி தொகை வழங்கப்பட்டது.

இந்த உதவித் தொகையினை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் JRD என்ற ராஜேந்திர ஜெயகோபால் அவர்கள் தலைமையில் வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்டதலைவர் பாபு ,தேன்குமார் ,ரியாஷ், நயீம், தளபதிகண்ணன் ,கோவை பசீர், கோவிந்தராஜ், ஷாஜஹான் ,கிரேஷ் அரவிந்த், ஜெகதிஷ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க