• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி – பிஎஸ்ஜி கல்லூரி முதலிடம்

October 17, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி பிஷப் அப்பாசாமி
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூடைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 150 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் இன்று இறுதிகட்ட கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.இதில் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி முதல் பரிசும், இரண்டாவது பரிசை கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியும், மூன்றாவது பரிசை நிர்மலா கலை அறிவியல் கல்லூரியும், நான்காவது பரிசாக ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரியும் பெற்றது.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் யுனிவர்சிட்டி உளவியல் துறை இயக்குனர் ராஜேஷ்வரன், பிஷப் அப்பாசாமி கல்லூரியின் செயலாளர் மிருணாலினி டேவிட், கல்லூரி முதல்வர் ஜெமீமா வில்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் படிக்க