• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தடாகத்தில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

October 9, 2019

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகளுக்காக அதிகளவு செம்மண் எடுப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இந்த விதிமீறல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் தடாகம் செங்கல் சூளைகளில் தொடர்ச்சியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகளவு மண் வெட்டிஎடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர் புகார்கள் செல்லவே மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தடாகத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றினை கண்டறியும் கருவிகளையும், ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர் . மொத்தம் 9 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்தக் கருவிகள் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மற்றும் சுற்றுசூழல் மாசடைவது குறித்து கண்காணிப்படுகிறது. கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் , உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் முகாமிட்டு காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு பணியானது இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க