October 9, 2019
தண்டோரா குழு
உலக அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. நோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேதியலுக்கான நோபல் பரிசு ஜான் பி.குடெனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.