October 4, 2019
தண்டோரா குழு
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்து வைத்தார்
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல விதமான வழக்குகளை விசாரிக்க உரிமையியல், குற்றவியல், கிருமினல், சிபிஐ, நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் கோவை நீதிமன்றத்தில் தினமும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இதே சூழ்நிலை நிலவி வருகிறது இதனால் நீதிமன்றங்களை அதிகப்படுத்தி வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதி துறை பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதியதாக நீதிமன்றங்கள், மற்றும் சார்பு நீதி மன்றங்கள் திறக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV வது கூடுதல் சார்பு நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.
நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.