• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்

October 3, 2019 தண்டோரா குழு

கோவையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட தலைவர் நந்தகுமார் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் கோவை மாவட்டத்திலுள்ள பல மாற்றுக் கட்சியினர் தினந்தோறும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் 56 ஆவது வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களை கோவை தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் முன்னிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்

இதுகுறித்து மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறும்போது,

அரசியலில் தூய்மையும் நேர்மையும் உள்ள கட்சியாக பாஜக திகழ்வதாகவும் வாரிசு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த கட்சி திகழ்வதால் அனைவரும் விரும்பி பாஜகவில் இணைகின்றனர் என்று கூறினார் இந்த நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரை மோகன்ராஜ் மாவட்ட துணை தலைவர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கூடி இருந்தனர்.

மேலும் படிக்க