• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் பாரில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய பைனான்சியர் கைது

September 30, 2019 தண்டோரா குழு

கோவை கணபதி பாரதிநகரை சேர்ந்த பைனான்சியர் தனியார் பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் ஜான்சன்.பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி என் எஸ் ஆர் சாலையில் உள்ள ஜே.கே ஹோட்டல் எனும் தனியார் பாரில் மது அருந்தி உள்ளார்.

அப்போது பார் ஊழியர்கள் பணம் கேட்டதால், மது போதையில் இருந்த ஜான்சன் பணம் தரமுடியாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதேபோல் பாரில் குடித்துக் கொண்டிருந்த மற்றவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி போலீசார் ஜான்சனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சனிடம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பொது இடத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் ஜான்சனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர் பைனான்ஸ் தொழிலில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து பொதுமக்களை மிரட்டி வசூல் செய்ததாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க