• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவர் மருத்துவமனையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

September 25, 2019 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவர் மருத்துவமனையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 49), அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்துவர் ஆக பணியாற்றி வருகிறார். அவர் இன்று வழக்கம்போல மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அப்பொழுது மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பழனிசாமிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

திடீர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர். மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு உள்ள டாக்டர்கள் இடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க