• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

September 21, 2019 தண்டோரா குழு

உலக மல்யுத்த போட்டியின் 86கி எடை பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா கொலம்பிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலக மல்யுத்த போட்டியில் அரை இறுதிக்கு இந்திய வீரர்கள் தீபக் புனியா, ராகுல் அவேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். 86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியாவும் 61 கிலோ எடை பிரிவில் ராகுல் அவேரும் அரை இறுதிக்கு முனேற்றம் அடைத்துள்ளனர். காலிறுதியில் கோலிம்பியா வீரர் காரலோசை 7-6 என்ற புள்ளி கணக்கில் தீபக் புனியா வீழ்த்தினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஆசிய சாம்பியனான ரசூல் கலியேவை 10 – 7 என்ற புள்ளி கணக்கில் ராகுல் அவேர் வென்றார்.

உலக மல்யுத்த அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க