• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாசிப் பருப்பு பாயாசம் செய்ய…!!

September 12, 2019 https://tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

நெய் – 50 கிராம்
தேங்காய் பால் – 4 கப்
வெல்லம் – 2 கப் (துருவியது)
முந்திரி, காய்ந்த திராட்சை – தலா 10 கிராம்
ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை:

இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, லேசான பொன்னிறம் வரும் வரை பாசிப் பருப்பை முதலில் வறுக்கவும். பிறகு போதுமான தண்ணீர் ஊற்றி அதை வேக வைக்கவும். 2 சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைச் சூடாக்கி, பாகாக்கிக் கொள்ளவும்.

பின்னர் வெல்லப் பாகு, தேங்காய் பாலை வேகவைத்த பருப்பில் சேர்த்து குறைந்த தீயில் அவை திக்காக வரும்வரை கொதிக்க விடவும். மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்புகளை வறுத்து, பாயாசத்தின் மேல் தூவவும். ஏலக்காய் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான பருப்பு பாயாசம் தயார்.

குறிப்பு:

சாரப் பருப்பும் இதனுடம் சேர்க்கலாம். மேலும் பாலும் இதனுடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க