• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்

September 11, 2019 தண்டோரா குழு

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமையேற்றியதற்காக ராஜஸ்தான் போலீசார் சரக்கு லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் படி சாலை விதி மீறல் உள்ளிட்ட குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி ராஜஸ்தானை சேர்ந்த லாரி ஓட்டுனர் பகவான் ராமு என்பவருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி டெல்லி போலீசார் இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இந்த தொகையை அவர் கடந்த 9 ஆம் தேதி ரோகினி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மோட்டார் வாகன சட்டப்படி அதிக அபராதம் விதிப்பதில் டெல்லி மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் படிக்க