• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருகின்ற 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் – தபெதக அறிவிப்பு

September 7, 2019 தண்டோரா குழு

கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை மக்களின் முக்கிய நீராதரமான சிறுவாணி அணையின் உயரம் 50 அடியாக உள்ளது. கேரள அரசு சிறுவாணி அணையில் 42 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கிறது. அதற்கு மேல் தண்ணீரை தேக்காமல் திறந்து விடுகிறது.அணையில் தண்ணீரை முழு கொள்ளவை எட்ட விடாமல் தண்ணீரை கேரள அரசு வீணாக்குகிறது. இதனால் கோவையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.தமிழக மக்களை கேரள அரசு வஞ்சிக்கிறது. 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.கடந்தாண்டு 3 முறை சிறுவாணி அணை நிரப்பிய போதும், கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழக அரசு தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் படிக்க