• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் உறுதி

August 30, 2019 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கல்லூரி மாணவ,மாணவிகள் உறுதி ஏற்றனர்.

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையில் நடைபெற்ற இதில், மாணவ மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நின்றனர்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களினால் தீமைகளை எடுத்து கூறி துணிப்பைகளை உபயோகப்படுத்துவோம் எனவும், பிளாஸ்டிக் இல்லா நகரம் அமைப்பதோடு, முதல் கட்டமாக கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லா பகுதயாக மாற்ற அனைவரும் முயற்சி செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.

மேலும் படிக்க