• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கம்

October 6, 2016 தண்டோரா குழு

காவிரி நீர் பிரச்சனையில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தமிழகம் – கர்நாடகம் இடையே போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையால் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தமிழக – கர்நாடகா இடையேயான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.இதனால் கடந்த 30 நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தது. அதே போல கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் தமிழக அரசு பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்படாமல் இருந்தது. தமிழக எல்லையுடன் நிறுத்தப்பட்டது.அதே போல கர்நாடக மாநில பஸ்கள் அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயங்கி வந்தது. ஓசூருக்கு இயக்கப்படவில்லை.இருமாநில எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடந்து சென்று கடக்கும் நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு பஸ்கள் 30 நாட்களுக்குப் பின் ஒசூர் வழியே கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன.இதேபோல் கர்நாடக அரசுப் பேருந்துகளும் 22 நாட்களுக்குப் பின் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க