• Download mobile app
20 Jul 2025, SundayEdition - 3448
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கர்நாடகாவுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கம்

October 6, 2016 தண்டோரா குழு

காவிரி நீர் பிரச்சனையில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தமிழகம் – கர்நாடகம் இடையே போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையால் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தமிழக – கர்நாடகா இடையேயான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.இதனால் கடந்த 30 நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தது. அதே போல கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் தமிழக அரசு பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்படாமல் இருந்தது. தமிழக எல்லையுடன் நிறுத்தப்பட்டது.அதே போல கர்நாடக மாநில பஸ்கள் அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயங்கி வந்தது. ஓசூருக்கு இயக்கப்படவில்லை.இருமாநில எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடந்து சென்று கடக்கும் நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு பஸ்கள் 30 நாட்களுக்குப் பின் ஒசூர் வழியே கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன.இதேபோல் கர்நாடக அரசுப் பேருந்துகளும் 22 நாட்களுக்குப் பின் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க