• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 73 சுதந்திர தினவிழா மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்

August 15, 2019 தண்டோரா குழு

கோவை வ.உ.சி. மைதானத்தில் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியேற்றினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் தியாகிகளை கௌரவித்தார்.

இதை அடுத்து, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், தோட்டக்கலை துறை, தாட்கோ, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என 15 துறைகளில் 129 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 251 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.

இறுதியாக, பரதநாட்டியம், கோலாட்டம், தேசப்பக்தி பாடல், ஒயிலாட்டம், சிலம்பம், கிராமியப்பாடல், தப்பாட்டம், கரகம், பிரமீட் என பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு இக்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க