• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அத்திவரதரை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்டவர்கள் மீது புகார்

August 14, 2019 தண்டோரா குழு

அத்திவரதரையும், இந்து மத நம்பிக்கையும் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் புத்தி வருமா என்ற தலைப்பில் அத்திவரதர் பார்க்கப் போய் அவரு பணக்கார சாமி ஆகிவிட்டார் அவரைப் பார்க்கப் போன எத்தனை பேரு பணக்காரர் ஆகி இருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அத்திவரதர் சுவாமியையும் இந்து மதத்தையும் புண்படுத்தும் வகையில் இதுபோன்ற வாசகத்தை வெளியிட்டிருப்பதாக தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.இவ்விவகாரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த இக்கூட்டமைப்பினர் பல கோடி பக்தர்களின் மனது புண்படும் விதமாக இது போன்ற வாசகங்களை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பின்னர் எழுதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர் மேலும், இந்து மத துவேசம் செய்துவரும் இவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் படியும்அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க