• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு

August 14, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த சர்க்கார் பதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன குழந்தை 5 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் வசித்த குடியிருப்புகளை கடந்த 5 நாட்களுக்கு பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது. உயிருக்கு போராடியவர்களை வனத்துறையினர் மீட்டு முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் சேர்த்து காப்பாற்றினர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த குஞ்சப்பன் – அழகம்மாள் ஆகியோரின் 2 வயது குழந்தை சுந்தரி காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.

குழந்தையின் உடலை வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக தேடி வந்த நிலையில் ஆழியாறு உட்டுக் கால்வாயில் 4 கிலோ மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கிடப்பதாக அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் பார்த்து தகவல் அளித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குழந்தையின் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த 5 நாட்களாக குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து கதறி அழுதனர்.

மேலும் படிக்க