• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மல் குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நிர்மல்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திவிக, திக, தபெதிக, சிபிஎம், விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,நிர்மல் குமாரை தனிமை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார்.மேலும் கருத்தூரிமையை பறிக்கும் வகையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதிமுக அரசு அண்ணா கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க