• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நூறாண்டுகளுக்கு மேல் மக்களின் மனக்கவலை போக்கிய ஆலயத்தை அகற்ற மக்கள் எதிர்ப்பு

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் நூறாண்டுகளுக்கு மேல் மக்களின் மனக்கவலை போக்கிய ஆலயத்தை அகற்ற வேண்டுமென அரசு அதிகாரிகள் துடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என கண்ணீர் மல்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில். மைசூரை ஆண்ட மூன்றாம் கிருஷ்ணராஜ தேவராயரால் 1876 ஆம் ஆண்டு இக்கோவில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் கோவில் அமைந்திருக்கிற பகுதியை ஒட்டி பாலம் அமைக்கப்படவுள்ளதால் கோவிலை அகற்ற வேண்டும் என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கரிவரதராஜ பெருமாள் கோயிலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக அங்கிருக்கும் இக்கோவிலை அகற்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலம் அமைக்கவும் அரசாங்க நடவடிக்கைக்கும் தாங்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை எனக்கூறும் இக்கோவிலை நிர்வகித்து வரும் குடும்பத்தினர், பாரம்பரியமான இக்கோவிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் போதும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் மிகப்பெரிய தொன்மை வாய்ந்தது எனக்கூறும் அவர்கள் இதனை உணர்ந்து அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலைத் துறையினரும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும் இக்கோவிலை மேம்படுத்த அறநிலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க