July 27, 2019
தண்டோரா குழு
மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் கோவை திராவிடர் விடுதலை கழக செயலாளர் நிர்மல் குமாரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
அண்மையில் நாகையில் மாட்டு கறி சாப்பிட்டதை முகநூலில் பதிவிட்டதற்காக இசுலாமிய தோழரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினரை கண்டித்து,முகநூலில் பதிவிட்ட கோவை திவிக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்யபட்டு சிறையிடைக்கப்பட்டார். நாகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர் ஒருவர் மாட்டுகறி சாப்பிட்டத்தாக முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த முகநூல் பதிவை நீக்ககோரி இந்து மக்கள் கட்சியினர் இஸ்லாமிரை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையே அதி்ர்ப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் நிரமல்குமார் கடந்த 17-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில் இந்த கருத்து இரு தரப்பபினரையிடையே மோதலை உருவாக்கும் விதமாக உள்ளதென மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நிர்மல்குமாரை வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பதட்டத்தை உண்டாக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மாவட்ட முதன்மை நீதிபதி நிரமல்குமாரை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து கோவை மத்திய சிறையடைக்கப்பட்டார்.