• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது

October 4, 2016 தண்டோரா குழு

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இது குறித்து பேசிய அக்கட்சியின் செயலாளர் ஆறுச்சாமி தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாததால், கர்நாடாகவில் பாஜக ஆட்சியை பிடிப்பதற்காகவே தமிழகத்தை வஞ்சிக்கும் செயலை செய்வதாக குற்றம் சாட்டினார். உடனடியாக காவிரி மேலாண்மையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட பத்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் படிக்க