July 18, 2019
தண்டோரா குழு
தமிழ் தேசியத்தின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறையை தடுப்பதே தமிழ் தேச இறையாண்மை கட்சியின் முக்கிய நோக்கம் என்று அக்கட்சியின் தலைவர் திருமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ் தேச இறையாண்மை என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இக்கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், செங்காந்தள் மலர் இக்கட்சியின் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமொழி, மதவாத மற்றும் சாதிய சக்திகள் தமிழகத்தை பிரித்தாள்கிறது என்று குற்றம்சாட்டினார். வடநாட்டவர்கள் கைக்கு தமிழகம் சென்று கொண்டிக்கிறது என்று கூறிய அவர், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் கட்சியாக திமுகவை ஒருபோதும் கருதவில்லை என்று திருமொழி விமர்சித்தார்.