• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ் தேச இறையாண்மை என்ற புதிய கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுகம்

July 18, 2019 தண்டோரா குழு

தமிழ் தேசியத்தின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறையை தடுப்பதே தமிழ் தேச இறையாண்மை கட்சியின் முக்கிய நோக்கம் என்று அக்கட்சியின் தலைவர் திருமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேச இறையாண்மை என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இக்கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், செங்காந்தள் மலர் இக்கட்சியின் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமொழி, மதவாத மற்றும் சாதிய சக்திகள் தமிழகத்தை பிரித்தாள்கிறது என்று குற்றம்சாட்டினார். வடநாட்டவர்கள் கைக்கு தமிழகம் சென்று கொண்டிக்கிறது என்று கூறிய அவர், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் கட்சியாக திமுகவை ஒருபோதும் கருதவில்லை என்று திருமொழி விமர்சித்தார்.

மேலும் படிக்க