• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார் ஜாப்பன் பேராசிரியர்

October 3, 2016 தண்டோரா குழு

மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற ஜப்பானின் யோஷினேரி ஒஸ்மி என்ற பேராசிரியர் தேர்வு செய்யபட்டுள்ளார்.

2016ம் ஆண்டிற்கான மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. இவ்விருதுக்காக ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஒஸ்மி தேர்வு செய்யப் பட்டுள்ளார். உடல் செல்கள் தம்மை தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது.

ஜப்பானின், டோக்கியோ பல்கலையில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றும் யோஷிநோரி, ஆட்டோஃபேஜி எனப்படும் செல்லியல் பிரிவில் நிபுணராக விளங்குகிறார்.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும் , நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அமைதிக்கான நோபல் பரிசு 7 ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் 10ம் தேதியும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க