July 6, 2019
தண்டோரா குழு
மேற்கு மண்டல காவல்துறையினருடன் டிஜிபி திரிபாதி தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவல்துறையினர் விருந்தினர் மாளிகையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்பு. இதைத்தவிர, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய 3 மாவட்ட மாநகர காவல்துறை ஆணையர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.