• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார் அட்டை வழங்கும் பணிகள்-தமிழக அரசிடம் ஒப்படைப்பு

October 1, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது என மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த மத்திய அரசு 7 கோடியே 21 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 7 கோடியே 7 லட்சம் பேருக்கு பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து 6 கோடியே 48 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீதமுள்ளவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் தமிழக அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்படவுள்ளதாக மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

இனி தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் கீழ் செயல்படும் இ–சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க