• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டிய ஐந்து இளைஞர்கள் கைது

June 25, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த முகமது கபீர், இவர்களது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் இவர்கள் 5 பேரும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து செல்போன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து முகமது ரியாஸ் வசந்தகுமார் முகமது அந்த், கமருதீன் முகமது கபீர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை மிரட்டிதோடு தட்டிக் கேட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது சபீர் மீது மட்டும் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவிகளை புகைப்படங்கள் எடுத்து மிரட்டி சமூக வலைத்தளங்களில் வாலிபர்கள் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க