• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவியாக உள்ளது – கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண்

June 22, 2019 தண்டோரா குழு

மாநகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுபடுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுபடுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும்
மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர காவல் துறையின் முயற்சியில் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல பழைய காவல் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவை சி 3 சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 லட்சம் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்களும், 4 அரை லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சியும் சாலையும், 16 லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் சுமித் சரண் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இது போன்று கண்காணிப்பு கேமராக்கள் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க பெரிதும் உதவியாக இருப்பதோடு குறிப்பாக கோவையில் நடைபெற்ற பல்வேறு கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

விழாவில் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு ஆணையாளர் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள்,காவலர்கள் மற்றும் சாய்பாபா காலனி பகுதியை சுற்றியுள்ள சமூக அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க