• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்

June 19, 2019 தண்டோரா குழு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இந்திய அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்திற்கு எதிரான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய அணியுடன் சதமடித்து அசத்திய தவான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார். இப்போட்டியில் தவான் 117 ரன்கள் எடுத்து இருந்தார்.இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஃபீல்டிங் செய்வதிலிருந்து விலகி டிரெஸ்ஸிங் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில், இவரை பரிசோதித்த இந்திய அணி ஃபிஸியோக்கள் தவான் கட்டாயமாக 3 வாரங்களுக்கு விளையாடக்கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், 3 வார கட்டாய ஓய்வு காரணமாக தவான் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க