June 8, 2019
குழந்தைகளுக்கு அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் மரகட்டைகளால் வடிவமைக்கப்பட்ட கண்காட்சி பொருட்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தது.
வார விடுமுறை நாளான இன்று லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோவை புருக் பீல் மாலில் சின்மயா வித்யாலயா சார்பில் மர கிளைகளை வைத்து கண்காட்சிகள் நடத்தபட்டது.இக்கண்காட்சியானது சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு அறிவியல் திறனை வளர்க்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று பண்ணை ஓலை, மரத்தூள், தென்னங்குருத்து,கொட்டாங்குச்சி,பாக்குமட்டை உள்ளிட்ட தேவையற்ற மர துகள்களை கொண்டு,விலங்கு மற்றும் பறவைகளின் உருவம், மனிதர்கள் உருவம்,கப்பல்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பார்வையாளர்களை வியக்க வைத்தது.இதன் மூலம் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஒலிக்கபட்டு முன்னோர்கள் காலத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர இது ஒரு வாய்ப்பாக அமையும் வகையில் இக்கண்காட்சியானது நடத்தபட்டு வருவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.