• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீரென ஊக்க மருந்து சோதனை

June 4, 2019 தண்டோரா குழு

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென நேற்று ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இத்தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர்.இதை மைதான அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இரண்டு கட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் சோத னையும் 45 நிமிடத்துக்கு பின் ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க