• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் பணிபுரிந்த 19 பேர் கைது

May 29, 2019 தண்டோரா குழு

கள்ளத்தோணி மூலம் உரிய ஆவணங்களின்றி திருப்பூர் வந்து பணிபுரிந்த வங்காளதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மாநில மட்டுமல்லாது வெளி நாட்டினரை சேர்ந்தவரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் விசாரணையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 இளைஞர்கள் கள்ளத்தோணி மூலம் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்களின்றி பணிபுரிந்து வருவதாக தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர்களை 15 வேலம்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் திருப்பூர் வந்ததற்கான விசா உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க