• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் பணிபுரிந்த 19 பேர் கைது

May 29, 2019 தண்டோரா குழு

கள்ளத்தோணி மூலம் உரிய ஆவணங்களின்றி திருப்பூர் வந்து பணிபுரிந்த வங்காளதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மாநில மட்டுமல்லாது வெளி நாட்டினரை சேர்ந்தவரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் விசாரணையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 இளைஞர்கள் கள்ளத்தோணி மூலம் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்களின்றி பணிபுரிந்து வருவதாக தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர்களை 15 வேலம்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் திருப்பூர் வந்ததற்கான விசா உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க