May 29, 2019
தண்டோரா குழு
கள்ளத்தோணி மூலம் உரிய ஆவணங்களின்றி திருப்பூர் வந்து பணிபுரிந்த வங்காளதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மாநில மட்டுமல்லாது வெளி நாட்டினரை சேர்ந்தவரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் விசாரணையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 19 இளைஞர்கள் கள்ளத்தோணி மூலம் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்களின்றி பணிபுரிந்து வருவதாக தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்களை 15 வேலம்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் திருப்பூர் வந்ததற்கான விசா உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.