• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை புங்கம்பாளையத்தில் 5 மணி நேரமாக வீணாகும் குடிநீர் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்

May 27, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையம் கிராமத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு 5 மணி நேரமாக குடிநீர் வீணாகி வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையம் கிராம் உள்ளது. இக்கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு அமைப்பட்ட குடிநீர் குழாய் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தொண்டாமுத்தூருக்கு குடிநீர் ஆதாரமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்குழாயில் இன்று மதியம் நான்கு மணியளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 5 மணி நேரமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று
கொண்டிருக்கிறது.

ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் வேளையில் குடிநீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருப்பதால் உடனடியாக இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க