May 27, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையம் கிராமத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு 5 மணி நேரமாக குடிநீர் வீணாகி வருகிறது.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையம் கிராம் உள்ளது. இக்கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு அமைப்பட்ட குடிநீர் குழாய் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தொண்டாமுத்தூருக்கு குடிநீர் ஆதாரமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்குழாயில் இன்று மதியம் நான்கு மணியளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 5 மணி நேரமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று
கொண்டிருக்கிறது.
ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் வேளையில் குடிநீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருப்பதால் உடனடியாக இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.