• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு

May 27, 2019 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி அருகே தாயார் தகாது உறவு காரணமாக 3 வயது சிறுமியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகள் ஸ்ரீதேவி (3) இந்த சிறுமி இன்று சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமியின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தாயாரை பிடித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் தாயாருக்கும் அப்பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளதும் இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியான தமிழ்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க