• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிகவேக வந்து மரத்தில் மோதிய சொகுசுகார் – 4 பேர் காயம்

May 24, 2019

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளைத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்து குளத்துபாளையம் பிரிவு அருகே புளியமரத்தில் அதிபயங்கர சத்தத்துடன் மோதியுள்ளது.

அருகே வீட்டில் துங்கி கொண்டு இருந்த பொது மக்கள் ஒடிவந்து பார்த்த பொழுது கார் உருக்குழைந்து . 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.

உடனடியாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொது மக்களே ஒன்று கூடி அனைவரையும் மீட்க முயற்சி செய்தனர். பின்னர் காரில் இருந்த ஜீவா, நந்தகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் காரை ஒட்டி வந்த சிவபாலன் என்பவர் காரில் சிக்கிக் கொண்டார். சுமார் 1 மணி நேரமாக அவரை மீட்க பொக்கலைன் இயந்திரம் உதவியுடன் போலீசார் முயன்றனர். பின்னர் இரண்டு கால்களும் துண்டான நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இவர்கள் 4 பேரும் வடவள்ளி பகுதியை அதிமுக பிரமுகர்கள் என தெரியவந்தது. அதிகாலை என்பதால் நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிகமாக சாலை என்பதால் அசம்பாவிதம் எதும் நடைப்பெறவில்லை. இது தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க