• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8-வது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

May 10, 2019 தண்டோரா குழு

டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி
இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

12வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதி சுற்றுப்போட்டியில்டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் அதிக பட்சமாக 38(25) ரன்கள் எடுத்தார்.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி காலமிறங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய டூ பிளஸ்சிஸ் 37 பந்துகளில் தனது அரை சதத்தினை பதிவு செய்தநிலையில் 50 (39) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஷேன் வாட்சன் 31 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 50 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 19 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட், அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 12ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி மும்பையுடன் விளையாடவுள்ளது.

மேலும் படிக்க