• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருண் விஜய்க்கு ஜோடியாகும் ரித்திகா சிங் !

February 11, 2019 தண்டோரா குழு

இறுதிச்சுற்று படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாக்ஸராக இருந்து நடிகையாக மாறிய ரித்திகா சிங். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதையடுத்து ஆண்டவன் கட்டளை ,சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கிறது. இது அருண் விஜய் நடிக்கும் 27 வது படம் பாக்ஸர் ஆகும். பாக்ஸர் படத்தில் பத்திரிகையாளராக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். ரித்திகா ரிப்போர்ட்டர் ஆக இருந்து பாக்ஸராக மாற முயற்சிப்பார் என்ற தகவலும் நம்பத்தக்க வட்டாரங்களிடமிருந்து கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிக்கையாளராக ரித்திகா சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க